×

வத்தலகுண்டு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலரை குடிபோதையில் தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விருவீடு பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு உசிலப்பட்டி அருகே நல்லுதீவன்பட்டியில் இருந்து குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் போலீஸ் தடுப்பில் மோதி கீழே விழுந்தார். பணியில் இருந்த லோகநாதன் என்ற காவலர் கீழே விழுந்தவரை தூக்கிவிட்டு அறிவுரை கூறியுள்ளார். இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் உடன் வந்தவர்கள் காவலர் லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது.பணியில் இருந்த காவலர் கடுமையாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவலர் தாக்கப்படுவது குறித்த தகவலறிந்து சென்ற காவல்துறையினர்
குடிபோதையில் இருந்த ராஜா, ரஞ்சித் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர். …

The post வத்தலகுண்டு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Wattalakund ,Dintugul ,Wattalakundu, Dintugul district ,Wattalakuntu Checkpoint ,Dinakaran ,
× RELATED தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல்,...